இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 273; பாதித்தோர் எண்ணிக்கை 8,356
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 127. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1761. கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்கள் 208 பேர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தலைநகர் டெல்லியில் 1069 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 25 தான்.
டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனாவின் பிடியில் சிக்கி 44 பேர் மீண்டுள்ளனர். கடந்த ஒரு வார காலமாக மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது. தற்போது தமிழகம் 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளது.
ராஜஸ்தானில் 3 பேரை பலி கொண்ட கொரோனாவுக்கு 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; தெலுங்கானாவில் 9 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். மொத்தம் 969 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 22 பேர் உயிரிழந்துள்ள குஜராத்தில் மொத்தம் 432 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த கேரளாவில் 2 பேர்தான் பலியாகி உள்ளனர். இம்மாநிலத்தில் இதுவரை 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேநேரத்தில் 123 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டும்விட்டனர்.
மத்திய பிரதேசத்தில் 532 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 452 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்கத்தில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications