Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண நோட்டுகள், காசுகள் மூலமும் கொரோனா பரவும்.. கவனம்.. ஹு விடுத்த எச்சரிக்கை.. இப்படி ஒரு சிக்கலா!?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பண நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    கொரோனா பரவி வரும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 95481 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

     எப்படி பரவும்

    எப்படி பரவும்

    இந்த வைரஸ் எப்படி எல்லாம் பரவும் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது. அதன்படி இந்த வைரஸ் முதற்கட்டமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நீர் குமிழிகள் மூலம் பரவும். அதாவது இருமல், தும்மலின் போது வெளியாகும் நீர் குமிழிகள் மூலம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும். அதேபோல் கை குலுக்குதல் மூலம் கூட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எத்தனை நாள் இருக்கும்

    எத்தனை நாள் இருக்கும்

    இந்த வைரஸ் பொதுவாக பல நாட்கள் சாதாரண இடத்தில் கூட உயிர் வாழும். அதாவது கதவில் கை பிடிக்கும் பகுதி, பொது இடங்களில் நோயாளிகள் தொட்ட பகுதி என்று இந்த வைரஸ் எங்கு வேண்டுமானாலும் உயிர் வாழும். பொதுவாக சாதாரண வெப்பநிலையில் 10 நாட்கள் வரை இது வாழும். குளிரான வெப்பநிலையில் 14 நாட்கள் வரை இந்த வைரஸ் இருக்கும். சூடான வெப்பநிலையில் குறைவாகவே வாழும்.

    கொஞ்சம் போதும்

    கொஞ்சம் போதும்

    இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கு மிக எளிதாக பரவும் என்பது குறிப்பிடத்தக்து. மிக சிறிய அளவு வைரஸ் இருந்தால் போதும். எளிதாக அது இன்னொருவரை தாக்கிவிடும். மூட்டை பூச்சி போல இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது கணிக்க கூட முடியாது. மிக மிக சிறிய பொருட்கள் வழியாக கூட இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இதை தடுக்கமுடியவில்லை.

    பணம் மூலம்

    பணம் மூலம்

    பண நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக அழுக்காக இருக்கும் ரூபாய் நோட்டுகள் வழியாக அதிக அளவில் வைரஸ் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் நோட்டுகளை மக்கள் வைரஸ் தாக்குதலோடு பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் அதன் மூலம் வைரஸ் பரவும்.

    காசுகளை அதிகம்

    காசுகளை அதிகம்

    முக்கியமாக காசுகளில் எளிதாக வைரஸ் குடியிருக்க வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் எத்தனை நாள் வாழும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதனால் ரூபாய் நோட்டுகள், காசுகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பண பரிவர்த்தனை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவில் சமீப நாட்களாக ஆன்லைன் பணபரிவத்தனை வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+