கொரோனாவால் வந்த ஒரு நன்மை.. உலக அளவில் நாய், பூனை இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகிறது
டெல்லி: கொரோனா தொற்று நோயால் உலக அளவில் ஏற்பட்டிருக்கும் ஒரு நன்மையாக நாய், பூனை இறைச்சி விற்பனை முடிவுக்கு வருகிறது.
Recommended Video
மனித குலத்துக்கு பேரழிவைத் தரக் கூடிய தொற்று நோய்கள் விலங்குகளிடம் இருந்து பரவி வருகிறது. தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கொடூரமாக தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் பிறப்பெடுத்த இந்த கொரோனா இப்போது 190 நாடுகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இத்தகைய ஆட்கொல்லி வைரஸ்கள் விலங்குகள் மூலம் பரவுகிறது என்பது நம்பிக்கை.
தற்போதும் கூட சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ காரணமே அவர்களது இறைச்சி பழக்கம்தான் என விமர்சிக்கப்பட்டது. நாய்கள், பூனைகளை சீனர்கள் அதிகம் உண்பதாலேயே இந்த தொற்று நோய் பரவியது எனவும் கூறப்பட்டது. ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் சீனாவின் ஷென்ஷான் நகரம் அண்மையில் நாய், பூனை இறைச்சி விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. சீனாவில் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தடை சட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாம நமது நாட்டின் மிசோரம் மாநிலத்திலும் நாய்களை இறைச்சிக்காக கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் தெருநாய்களே இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. இறைச்சிக்காக நாய்களை மாநிலங்கள் விட்டு மாநிலம் கடத்துகிற அட்டூழியங்களும் நடந்து வந்தன. நாகாலாந்தில் நாய்கறி இறைச்சிக்கு தடை விதிக்க பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தற்போது கொரோனாவின் தாக்கத்தால் பரவலாக நாய், பூனை உள்ளிட்டவைகளின் இறைச்சி உண்பது ஆரோக்கியமானது அல்ல என்கிற கருத்து நம்பிக்கைக்குரியதாக மாறி இருக்கிறது.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications