விதிமுறை மீறி மத நிகழ்ச்சி.. கொரோனா பரவ காரணம்.. டெல்லி மதபோதகர் மீது பல பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
டெல்லி: டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபைக்கு தலைமை தாங்கிய மத போதகர் மற்றும் பலர் மீது அரசு உத்தரவுகளை மீறியதற்காகவும், பலரை கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியதற்காகவும் பல பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Recommended Video
1897 மற்றும் தொற்று நோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் பிரிவு 269 (நோய் தொற்று பரவ வாய்ப்புள்ள கவனக்குறைவான செயல்), 270 (தீங்கு விளைவிக்கும் செயல் பரவ வாய்ப்பு) பிரிவு 3 (நோய் தொற்று தண்டனை), 271 (தனிமைப்படுத்தப்பட்ட விதிக்கு கீழ்ப்படியாமை) மற்றும் ஐபிசியின் 120 பி (குற்றவியல் சதித்திட்டம்) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பாய்ந்துள்ளன.
தெற்கு டெல்லியில் உள்ள உள்ள மார்கஸ் (மையம்) மார்ச் 1 முதல் 15 வரை தப்லீ-இ-ஜமாஅத்தை ஏற்பாடு செய்ததுடன், வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் உட்பட குறைந்தது 2,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்கஸ் மையத்தில் வசிப்பவர்கள் பலருக்கு கோவிட் -19 அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.
தகவல் அறிந்ததும் போலீஸ் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் அந்தப் பகுதியை சீல் வைத்தனர்.
டெல்லியில், இந்த நிகழ்வில் பங்கேற்ற குறைந்தது 24 பேர் கோவிட் -19 பாதிக்ப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று வெளியான தகவல்படி, தமிழகத்தில் மட்டும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
டெல்லி சபையில் கலந்து கொண்ட தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த, 6 பேர் கொரோனா வைரஸால் இறந்ததை தெலுங்கானா அரசு உறுதிப்படுத்தியது.
விசா விதிமுறைகளை மீறியதற்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 300 வெளிநாட்டினரை இந்தியா தடுப்புப்பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தடையுத்தரவை மீறி கூட்டம் நடத்தியதற்காக, மதபோதகர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து டெல்லி காவல்துறை இன்று மாலை, வழக்குப் பதிவு செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications