கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2ம் இடத்தில் தமிழகம்; நோயாளிகள் எண்ணிக்கையில் 4-வது இடம்
டெல்லி: நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது; கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஜூலை 30-ந் தேதி வரையில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய அரசு விரிவான விவரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15,83,792. இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,20,582.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 34,968. இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 5,28,242.

மகாராஷ்டிராவில் பாதிப்பு- குணமடைந்தோர் எண்ணிக்கை
நாட்டில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,00,651. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,39,755. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,463. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 1,46,433.

குணமடைந்தோர் எண்ணிக்கையில் 2-வது இடத்தில் தமிழகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,34,114. இதில் 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,741. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுகிற நோயாளிகள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 57,490 மட்டும். இது இந்திய அளவில் 4-வது இடம்.

கர்நாடகா 2-வது இடம்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற- ஆக்டிவ் கேஸ்களில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 1,12,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 42,901 பேர் குணமடைந்தனர். 2,147 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது 67,456 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவுக்கு 3-வது இடம்
ஆக்டிவ் கேஸ்களில் இந்திய அளவில் 3-வது இடத்தில் ஆந்திரா உள்ளது. ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,390. இங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,406. ஆந்திராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,213. ஆந்திராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 63,771 ஆகும்.

உயிரிழப்பு இல்லாத மிசோரம்
நாட்டின் இதர மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 29 ஆயிரத்துக்கும் கீழே உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 29,997 அதிகபட்சமாகும். நாட்டிலேயே குறைந்தபட்ச ஆக்டிவ் கேஸ் மிசோரத்தில்தான். இங்கு மொத்தமே 183 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மிசோரமில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications