மோடியையே பெல்ஜியம் போக விடாமல் இடையூறு செய்துவிட்டதே கொரோனா.. ஒத்திப்போகிறது உச்சிமாநாடு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிரஸ்ஸல்ஸ் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை, செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நிருபர்களிடம் இதை உறுதி செய்தார்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பால், இந்திய-ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் அடுத்த நாடுகளில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உச்சிமாநாடு பரஸ்பர வசதியான தேதிக்கு மாற்றியமைக்கப்படும். இந்த தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிரஸ்ஸல்ஸில் 10 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பெல்ஜியத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் உலக சுகாதாரத்திற்கான கவலைகளையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர், மேலும் பாதிப்பு விரைவில் சீரடையும் என்று நம்புகின்றனர் என்று ரவீஷ் குமார் தெரிவித்தார்.
அதேநேரம், பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்றும் ரவீஷ் குமார் கூறினார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications