மோடியையே பெல்ஜியம் போக விடாமல் இடையூறு செய்துவிட்டதே கொரோனா.. ஒத்திப்போகிறது உச்சிமாநாடு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிரஸ்ஸல்ஸ் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின், பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை, செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், நிருபர்களிடம் இதை உறுதி செய்தார்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பால், இந்திய-ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் அடுத்த நாடுகளில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உச்சிமாநாடு பரஸ்பர வசதியான தேதிக்கு மாற்றியமைக்கப்படும். இந்த தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிரஸ்ஸல்ஸில் 10 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் பெல்ஜியத்தில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் உலக சுகாதாரத்திற்கான கவலைகளையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர், மேலும் பாதிப்பு விரைவில் சீரடையும் என்று நம்புகின்றனர் என்று ரவீஷ் குமார் தெரிவித்தார்.
அதேநேரம், பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் விவரங்கள் பின்னர் பகிரப்படும் என்றும் ரவீஷ் குமார் கூறினார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications