கனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது?
பாலிவுட் பாடகி கனிகா கபூர் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெல்லி: பாலிவுட் பாடகி கனிகா கபூர் மூலம் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கனிகா கபூருக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது, அவர் எப்படி மற்றவர்களுக்கு பரவ காரணமாக இருந்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
பாலிவுட்டை சேர்ந்த கனிகா கபூர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பெரிய பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோதான் இவரின் சொந்த ஊர்.
கடந்த பிப்ரவரி மாதம் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் லண்டன் சென்றுள்ளார். அதன்பின் மார்ச் மாதம் 9ம் தேதி இவர் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார்.

மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையத்திற்கு வந்த இவர் அங்கு சோதனையில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே சென்றுள்ளார். அங்கு அவருக்கு சோதனை செய்யப்படவில்லை. அதன்பின் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மார்ச் 11ம் தேதி லக்னோ சென்றுள்ளார். இந்த பயணம் எதிலும் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை. மார்ச் 16ம் தேதிதான் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது.

என்ன செய்தார்
இதன்பின் லக்னோவில் உள்ள KGMU மருத்துவமனையில் இவருக்கு சோதனை நடந்தது. அதில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, அட இதில் என்ன இருக்கிறது, ஒரு பாடகிக்கு கொரோனா உள்ளது. இதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். இவர் கலந்து கொண்ட ஒரு பார்டிதான் இந்த பிரச்சனைக்கு காரணம். மார்ச் 15ம் தேதி இவர் லக்னோவில் ஒரு பார்டியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

100 பேர்
இந்த விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அப்படியே அதே வைரஸோடு இவர் பார்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்தும் பங்கேற்று இருக்கிறார். இதுதான் தற்போது பிரச்சனை ஆகி உள்ளது. கனிகா கபூர் மூலம் இவர்களுக்கு கொரோன பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

எத்தனை பேர் சந்தித்தார்
கனிகா கபூர் கலந்து கொண்ட இந்த விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் கலந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் கனிகா உடன் இந்த விழாவில் மிகவும் நெருக்கமாக இருந்து உள்ளார். இவர்களுக்கு எல்லாம் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வைரஸ் எப்படி
இதில் இன்னொரு விஷயம் இந்த மூன்று எம்பிக்களும், இந்த பார்ட்டிக்கு பின் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள், அங்கு பல்வேறு எம்பிக்கள், பாஜக தலைவர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வசுந்தரா ராஜே மகன் எம்பி துஷ்யந்த் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இருக்கிறார். அவருடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்.

சோதனை
இதனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று இரவோடு இரவாக கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் பாஜக எம்பிக்கள் பலர் வெளியே வராமல் இதனால் முடங்கி உள்ளனர். வசுந்தரா ராஜேவும், அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த் தங்களை தனிமை படுத்துக்கொண்டு உள்ளனர். பல அரசியல் தலைவர்கள் இதனால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications