கொரோனா வைரஸ்...தொடர்ந்து 7வது நாளாக...இந்தியாவில் தொற்று அதிகரிப்பு!!
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 50,000த்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏழாவது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகாரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,06,613 ஆக அதிகரித்து, இறப்பும் 39,820ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், இன்னும் 5,86,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 66.31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை 2,14,84,402 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிழமை மட்டும் 6,19,652 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா புதிதாக வருபவர்களுக்கும், மீண்டு வருபவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 10 ஜூன் 2020ல் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக கூடுதலாக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா 4,57,956, தமிழ்நாடு 2,68,285, ஆந்திரப்பிரதேசம், 1,76,333, கர்நாடகம் 1,45,830, டெல்லி 1,39,156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் வேகம் காட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் இருக்கின்றன. மூன்றாம் கட்ட மனித ஆய்வுக்குப் பின்னர் வெற்றி பெற்றால்தான் மனிதருக்கு தடுப்பு மருந்து போடப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவியல் ஆராய்ச்சியாளர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications