இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166; 5734 பேருக்கு பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 5,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் அரசு கணக்கின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் 669 பேருக்கு கொரோனா இருக்கிறது; இங்கு மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனாவுக்கு 16 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆனால் இம்மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 179 பேருக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.
தெலுங்கானாவில் 427 பேரும் உ.பி.யில் 361 பேரும் ராஜஸ்தானில் 381 பேரும் கேரளாவில் 345 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திராவில் 348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications