இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 471; பலி- 652 : மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,471 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆகவும் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவின் தாக்கம் தொடர்பாக https://www.mohfw.gov.in/ இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் தொகுப்பு:
மகாராஷ்டிராவில் கொரோனாவால் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் 5221 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குஜராத், டெல்லி நிலவரம்
நாட்டில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது குஜராத் மாநிலம். இங்கு கொரோனாவுக்கு 95 பேர் பலியாகி உள்ளனர். அத்துட்ன் 2272 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்ற 144 பேர் வீடு திரும்பியுள்ளனர். 3-வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2156. உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.

3-வது இடத்தில் ராஜஸ்தான்
குஜராத், டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தானில் 1801பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 25 பேர் இம்மாநிலத்தில் மரணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 1626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 18 பேர் மாண்டும் போயுள்ளனர். 5-வது இடத்தில் மத்திய பிரதேசம், 6-வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

வட இந்தியா
மத்திய பிரதேசத்தில் 1592 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 1412 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தி 80 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 21 பேரும் கொரோனாவால் மரணித்திருக்கின்றனர். தெலுங்கானாவில் 945 பேரும் ஆந்திராவில் 813 பேரும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20471. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 652. ஆனால் https://www.covid19india.org/ புள்ளி விவரப்படி இந்தியாவில் 21,370 பேர் பாதிக்கப்பட்டும் 681 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மத்திய அரசின் பக்கத்தில் பல மாநில நிலவரங்கள் அப்டேட் செய்யும் போது எண்ணிக்கையும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications