நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் மே 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட லாக்டவுன் இன்றுடன் நிறைவடைந்தது. இதனால் இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நாட்டு மக்களிடையே அண்மையில் உரையாற்றிய பிரதமர் மோடி, லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றும் 4-வது கட்ட லாக்டவுன் புதிய வகையில் இருக்கும் என்றும் கூறினார். இதனிடையே தமிழகத்தில் மே 31-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அத்துடன் லாக்டவுன் காலத்தில் நீடிக்கக் கூடிய கட்டுப்பாடுகள், புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் மத்திய அரசும் லாக்டனை மே 31-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.'

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமே இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. முதல் 2 லாக்டவுன்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். 3-வது லாக்டவுன் நீட்டிப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 4-வது லாக்டவுன் நீட்டிப்பை தேசிய பேரிடம் மேலாண்மை வாரியம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து லாக்டவுன் நீட்டிப்புக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications