ஈரானில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈரானுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கொரோனா பாதித்த 255 இந்தியரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 800க்கும் அதிகமானோர் ஈரான் சுற்றுலா சென்றிருந்தனர். ஈரானின் கோம் நகரில் அவர்கள் தங்கியிருந்த போது கொரோனா வைரஸ் தாக்கியது.

இதையடுத்து இந்தியாவில் இருந்து மருத்துவர்கள் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்குழு நடத்திய பரிசோதனைகளின் முடிவில் 255 இந்தியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் 255 பேரில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications