உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு- மாஸ்க் போடுங்க.. கைகளை கழுவுங்க.. பிரதமர் மோடி அட்வைஸ்
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கிபாத்தில் இன்று உரையாற்றினார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 661,530,316 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் மட்டும் 393,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் 6,685,247 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
தற்போது ஜப்பான், தென்கொரியா, தைவான், பிரான்ஸ், ஹாங்ஹாங்கில் கொரோனா பரவல் அதி உச்சமாக உள்ளது. ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 177,622 ஆக இருக்கிறது. தென்கொரியாவில் 66,049, பிரான்ஸில் 40,744 என ஒருநாள் கொரோனா பாதிப்பு உள்ளது.

சீனாவில் நிலைமை மோசம்
உலகிலேயே சீனாவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவின் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை தர முடியாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர். இதனால் கொரோனா பரவல் எண்ணிக்கையையே அறிவிப்பதை சீனா நிறுத்திவிட்டது.

பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்நிலையில் பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என கவலை தெரிவித்தார். மேலும் கொரோனா பரவலைத் தடுக்க நாம் கவனமுடன் இருக்க வேண்டும்; அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

காலா அசார் - கருங்காய்ச்சல் எச்சரிக்கை
கங்கை சமவெளியில் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பங்களித்து சிறப்பாக செயல்பட்ட கங்கா தூத், கங்கா பிரஹாரிக்கு நன்றி: நாளை டிசம்பர் 26, புது தில்லியில் சாஹிப்ஜாதாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வீர்பால் திவாஸ் விழாவில் கலந்துகொள்வதைப் பெருமையாக கருதுகிறேன். மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, யோகாவும் ஆயுர்வேதமும் ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் டாடா ஆராயச்சி மையம், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளது. அவர்கள் தங்கள் ஆய்வை ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளனர். காலா அசார் என்னும் கருங்காய்ச்சல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கலாம். சமீப காலம் வரை, 4 மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காலா-அசார் நோய் பரவியுள்ளது எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

கொரோனா தடுப்பூசிகளில் சாதனை
அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டிற்கு சிறப்பான தலைமையை வழங்கிய அரசியல்வாதி. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் அவருக்கு தனி இடம் உண்டு: 2022-ம் ஆண்டில் தான் பாரதத்தின் முதல் சுதேசி விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கடற்படையில்
இணைக்கப்பட்டது. நான் உலக ஆயுர்வேத காங்கிரஸில் கோவாவில் இருந்தேன், மேலும் 40+ நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 215+ நிறுவனங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. 1 லட்சம் + நபர்கள் ஆயுர்வேதம் தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். 2022-ம் ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கான தனித்துவ அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளாம், 220 கோடி தடுப்பூசிகளின் நம்பமுடியாத சாதனையை அடைந்துள்ளோம் மற்றும் ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர் சாதனையைப் படைத்தது. இந்த ஆண்டிலே தான்,பாரதம் தான் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியது, அமிர்த காலமும் தொடங்கியது. உண்மையில் 2022-ம் ஆண்டு மக்களுக்கு பல வழிகளில் ஊக்கமளித்துள்ளது என்றார் பிரதமர் மோடி.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications