கொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்!
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசார கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சவேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு என்பது 2.6 லட்சத்தை தாண்டியதாக இருக்கிறது. கொரோனா மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை
கொரோனா தடுப்பூசிகளும் முனைப்பாக நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்கிற புகார்களும் எழுந்துள்ளது.

கூட்டங்கள் ரத்து
இதனிடையே கொரோனா பரவல் எதிரொலியால் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் பிரசார கூட்டஙகளை ரத்து செய்வதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

பாஜக மீது மமதா புகார்
இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிற மாநிலங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து மேற்கு வங்கத்தில் கொரோனாவை பாஜக பரப்பி வருகிறது என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால் மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்திருந்தது. தற்போதைய நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ராகுல் வேண்டுகோள்
இதனையடுத்து தமது தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்!












Click it and Unblock the Notifications