ஆசியாவில் இந்தியா மிக மோசம்.. இன்னும் 1 வாரத்தில் இரட்டிப்பு ஆகும்.. பகீர் கொரோனா புள்ளி விவரம்!
இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
டெல்லி: இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
கொரோனா பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கோவிட் டிராக்கர் (John Hopkins Covid Tracker) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் குறித்த [புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவுகிறது என்று இந்த புள்ளி விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி மொத்தம் 11,439 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 390 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

வேகம் எப்படி உள்ளது
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா 24% உயர்ந்துள்ளது. அதற்கு முன் உள்ள இரண்டு நாட்களில் கொரோனா 28% ஆக பரவியது. இது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது.

இரட்டிப்பு ஆகிறது
ஆம் இந்தியாவில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா இரட்டிப்பு அடைந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம். ஆனாலும் இந்தியா ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட மிக மோசமாக இதில் பின் தங்கி உள்ளது.

அண்டை நாடுகளின் நிலை
தென் கொரியாவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட அதிகமாக உள்ளது. 7 நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவில் 109% கொரோனா ஏற்படுகிறது. இந்தோனேசியா பிரேசில், ஈரான், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவை விட குறைவான வேகத்தில்தான் கொரோனா பரவுகிறது

தற்போது நிலைமை என்ன
கொரோனா பாதிப்பில் தென் கொரியா, அயர்லாந்து, சுவீடன், பெரு, ஜப்பான், சிலி , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இந்தியா முந்தி இருக்கிறது. ஆனால் ஆசியாவில் வங்கதேசத்தில் இந்தியாவை விட அதிகமாக கொரோனா பரவுகிறது. வங்கதேசத்தில் 826% கொரோனா வேகம் எடுக்கிறது. இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கை இந்தியாவில் இதை விட வேகமாக உயர்கிறது.

பலி எண்ணிக்கை
ஆம் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை 5 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் அடுத்த வாரம் 20 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அடுத்த மாதம் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications