உலகிலேயே அதிகம்.. இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா!
டெல்லி: இந்தியாவில் வெறும் 24 மணி நேரத்தில் 64142 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் இந்தியாவில்தான் உலகிலேயே புதிதாக அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. தீவிரமான கட்டுப்பாடு, லாக்டவுன் விதிக்கப்பட்டு கூட கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவில்தான் புதிதாக அதிக கேஸ்கள் தினமும் பதிவாகி வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா விரைவில் இரண்டாம் இடம் அடையும் என்கிறார்கள்.

மொத்த கேஸ்கள்
இந்தியாவில் மொத்தமாக 2459613 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 660348 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் இருக்கிறார்கள். 54776 பேர் கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 1750636 பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் எத்தனை
கடந்த 24 மணி நேரத்தில் 1006 பேர் பலியாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் இத்தனை பலியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் மொத்தமாக 48144 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா கேஸ்கள்
மகாராஷ்டிராவில் 560122 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 19063 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 320355 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 5397 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் 264142 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 2378 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 203200 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 3614 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications