டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகளை டெல்லி மாநில அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா மரணங்களும் டெல்லியில் கொத்து கொத்தாக நிகழ்கின்றன.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படுகின்ற மரணங்கள் தேசத்தை உலுக்கி எடுக்கின்றன. டெல்லியில் பேரவலம் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
இந்த நிலையில் டெல்லி அரசானது, நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த 100 அறைகளும் கொரோனா சிகிச்சை படுக்கைகளாக மருத்துவ வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications