மோடி அரசின் அலட்சியத்தால்.. நாடு இப்போது பயங்கரமான விலையை கொடுக்க வேண்டியுள்ளது... சோனியா சாடல்
டெல்லி: மோடி அரசு ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்ததால் நாடு இப்போது பயங்கர விலையைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
Recommended Video
இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் இடைக்கால தலைவர் "சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதேபோல நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகள் மோடி அரசு வேண்டுமென்றே புறக்கணித்தது. இதற்கான மிகப் பயங்கரமான விலையை நாடு இப்போது கொடுத்து வருகிறது.
சில அரசியல் காரணங்களுக்காக சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வுகளுக்கு நாட்டில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. இதுதான் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம், நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார கட்டமைப்பு சரிந்துவிட்டது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் தனது பொறுப்பைக் கைவிட்டுள்ளது. 18 முதல் 45 வயதிற்குட்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்குத் தடுப்பூசி போடும் செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மத்திய அரசு தடுப்பூசி நிதியை செலவழிக்காமல் சென்டரல் விஸ்டா திட்டத்திற்குப் பல ஆயிரம் கோடி செலவு செய்கிறது. தடுப்பூசி செலவுகளை மத்திய அரசே ஏற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசுக்குத் தடுப்பூசி பணிகள் முக்கியத்தனதாகத் தெரியவில்லை.
தற்போது அனைவருக்கும் தடுப்பூசி மட்டும் தான் தேவை. நாட்டிலுள்ள அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசிகளை மோடி அரசு செலுத்த வேண்டும். இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தையும் மோடி அரசு கூட்டி விவாதிக்கலாம்" என்றார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications