Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவர் தனி உலகத்தில் வாழ்கிறார் போல.. பாபா ராம்தேவை கடுமையாக விமர்சித்த டெல்லி உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விளம்பர விஷயத்தில் ரூஹ் அஃப்சா எனும் பிராண்டை பதஞ்சலி நிறுவனம் விமர்சித்திருந்தது. இதனை கண்டித்துள்ள நீதிமன்றம், பாபா ராம்தேவ் தனி உலகத்தில் வாழ்கிறார் என்று விமர்சித்திருக்கிறது.

ஏற்கெனவே இது பற்றிய பஞ்சாயத்து எழுந்தபோது நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்திற்கு வார்னிங் கொடுத்திருக்கிறது. இருப்பினும் அதை தற்போது பாபா ராம்தேவ் மீறியிருக்கிறார்.

Patanjali Baba Ramdev Ramdev

ஹம்டார்ட் நிறுவனத்தின் பிராண்ட்தான் இந்த ரூஹ் அஃபசா. பிரபல இயற்கை பானத்தை தயாரிக்கும் கம்பெனியாக இருக்கும் இந்நிறுவனத்திற்கு எதிராக கடந்த காலங்களில் பதஞ்சலி விளம்பரங்களை வெளியிட்டு வந்திருக்கிறது. பாபா ராம்தேவ் பதஞ்சலியின் ஆயுர்வேத பானங்களை விளம்பரப்படுத்தும்போது இந்நிறுவனத்தின் பிராண்டை கடுமையாக தாக்கியிருக்கிறார். 'இது ஆரோக்கியத்துக்கே தீங்கு விளைவிக்கக்கூடும்' என்று குறிப்பிட்டு, எங்களது தயாரிப்புகளை வாங்குங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பான அந்நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதஞ்சலி விளம்பரத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மட்டுமல்லாது உடனடியாக இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பதஞ்சலி தரப்பில் ஆஜராகியிருந்த பாபா ராம்தேவ், இனி இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்றும், இதற்கு முன்னர் நாங்கள் வெளியிட்டிருந்த விளம்பரத்தை நீக்குகிறோம் எனவும் கூறியிருந்தார்.

ஆக இதுதான் வழக்கின் பின்னணி. இப்படி நீதிமன்றத்தில் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு தற்போது மீண்டும் இதே மாதிரியான விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது பதஞ்சலி நிறுவனம். எனவே மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமித் பன்சால், "பாபா ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார். யாருடைய கட்டுப்பாடிலும் இல்லை" என்று விமர்சித்திருக்கிறார்.

மேலும், "முந்தைய உத்தரவையும், ராம்தேவின் அபிடேவிட்டையும் கணக்கில் கொள்ளும்போது இது வெளிப்படையாக நீதிமன்ற அவமதிப்பாக இருக்கிறது. எனவே பாபா ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அதற்கு முன் இந்த விளம்பரத்தை டெலிட் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள ராம்தேவ், 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணை நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இப்படி இருக்கையில், தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+