பாரத் பயோடெக்கின் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது- 3-ம் கட்ட பரிசோதனை முடிவு!
டெல்லி: பாரத் பயொடெக் நிறுவனத்தின் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது என 3-வது கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
நாட்டின் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 34 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசிகள்
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயடோக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அல்லாமல் ஸ்புட்னிக்V, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட உள்ளன.

சைகோவ் டி
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

3-ம் பரிசோதனை
இதில் கோவாக்சின் 77.8% பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது முதல் 98 வயது வரையிலானவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 25 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பானது
இந்த சோதனையின் முடிவில் கோவாக்சின் 77.8% பலன் தரக் கூடியது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடுமையான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு 93.4% பலன் தருகிறது கோவாக்சின். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புதிய டெல்டா வகை கொரோனஸுக்கு எதிராக 65% செயல்படக் கூடியது கோவாக்சின் என பாரத் பயோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications