திடீர் வேகம்! இந்தியாவில் ஒரே நாளில் 40% அதிகரித்த கொரோனா.. அடுத்த அலையின் தொடக்கமா? அறிகுறிகள் என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது 4ஆவது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டு இருந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அதில் தீவிர பாதிப்புகள் ஏற்படாத நிலையில், பாதிப்புகளும் லேசாகவே இருந்தது.
அதன் பின்னர் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

கவலை
சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. நேற்று 5,233 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 7240 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது நேற்றைக் காட்டிலும் 40% அதிகமாகும். கடந்த மார்ச் 2ஆம் தேதி தினசரி பாதிப்பு 7,554ஆக இருந்த நிலையில், இப்போது 3 மாதங்களுக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு மீண்டும் 7 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இது 4ஆவது அலையின் தொடக்கமாக இருக்குமோ என்றும் பலரும் சந்தேகிக்கின்றனர்.

கவலை வேண்டாம்
இருப்பினும், வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரிப்பது அடுத்த 19 அலையின் தொடக்கத்திற்கான அறிகுறி இல்லை என்றே பெரும்பாலான வல்லுநர்கள் நம்புகின்றனர். கொரோனா வைரசின் திரிபுகள் இரண்டாவது முறையாகக் கடுமையான தொற்றுநோயைப் ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வரும் காலங்களில் புதிய அலை ஏற்பட்டாலும் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு எனக் குறிப்பிட்ட டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, மாஸ்க் அணிவது போன்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் 4ஆம் அலை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

எய்மஸ் பேராசிரியர்
டெல்லி எய்மஸ் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், "கொரோனா போன்ற ஆர்என்ஏ வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே தான் இருக்கும். இருப்பினும் தீவிர பாதிப்பு உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு. இதுபோன்ற வைரஸ்கள் விரைவாக முடிவடையாது. வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதும் குறைவதும் தொடரும். இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளுடன் ஒப்பிடுகையில், அந்தளவு மோசமான நிலை ஏற்படாது. நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்" என்றார்.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
கொரோனா அறிகுறிகள் சற்று மாறிக் கொண்டே தான் இருக்கிறது. இப்போது தும்மல், இருமல், அதிக காய்ச்சல், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் ஒருவர் கவனிக்க வேண்டும். ஒருவருக்கு 2-3 நாட்களாக வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லாமல் உடல் வலி ஏற்பட்டால் கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பசியின்மை, கவனமின்மை, எரிச்சல், மார்பு, தடிப்புகள், கை-கால் வலி கொரோனா வைரசின் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

என்ன காரணம்
இந்தியா மட்டுமின்றி உலகின் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இருப்பினும், வேக்சின் உள்ளிட்ட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஓமிக்ரான் கொரோனாவின் BA5 வகை காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications