உலகம் முழுவதும் கொரோனாவால் 18.11 கோடி பேர் பாதிப்பு -16.57 பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 4,00,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது.
டெல்லி: உலகம் முழுவதும் புதிதாக 4,00,679 பேர் கொரோனா கொடுந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும்
கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,37,737 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்டாலும் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா உருவாகிக் கொண்டே இருக்கிறது.

டெல்டா வைரஸ் பரவி வந்த நிலையில் டெல்டா பிளஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது புதிதாக 4,00,679 பேர் கொரோனா கொடுந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,11,59,585 பேராக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,37,737 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 16,57,46,417 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்
கொரோனாவால் ஒரே நாளில் 8,409 பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,924,408 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 1,14,88,760 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமான நிலையில் 80,549 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் நான்காவது இடத்தில் பிரான்ஸ் நாடும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் துருக்கியை பின்னுக்கு தள்ளி தற்போது ரஷ்யா 5 வது இடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications