விஸ்வரூபம்.. எகிறும் வைரஸ்களின் பாதிப்புகள்.. இந்தியாவில் 3வது அலை பரவல் குறித்து வெளியான தகவல்
3வது அலை இந்தியாவில் வர உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது.. இதையெல்லாம் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்றே தான் நினைப்பதாக, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் டாக்டர் என்கே அரோரா தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் கொரோனா, இன்னொரு பக்கம் ஒமிக்ரான் என உலக நாடுகளை வைரஸ்கள் மிரட்டி கொண்டிருக்கின்றன..
இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் முழுவீச்சில் இறங்கி விட்டன. அந்த வகையில் இந்தியாவிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி விட்ட நிலையில், இந்தியாவில் 3வது அலை தொடங்கியிருப்பதை சுட்டிக்காட்டியிருப்பதாக நிபுணர்கள் காட்டினாலும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

டெல்டா
இதில், டெல்டாவை விட பல்வேறு மாறுபாடுகளை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது... தென் ஆப்ரிக்காவில் சுமார் 2 மாதத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது... உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன..

இந்தியா
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் 3வது அலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தபடியே உள்ளது.. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்... எனினும், இந்தியாவில் ஒமைக்ரான் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, நோய் எதிர்ப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா விளக்கம் அளித்துள்ளார்.

3வது அலை
அவர் சொல்லும்போது, "கடந்த ஒரு வாரமாகத்தான் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது... இது 3வது அலையை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான், முக்கிய நாடுகளிலும் திடீரென ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துவிட்டது.. ஆனால் நாம் பதற்றம் அடைய தேவையில்லை... நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இப்படிப்பட்ட வைரஸ் தாக்குதல் அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்படலாம்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில்,2 வாரங்களுக்கு ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தது... அதற்கு பிறகு படிப்படியாக குறைந்து விட்டது... பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியவில்லை. எப்படியும் ஒமிக்ரான் பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்று தெரிகிறது..

பாதிப்பு
இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் இயற்கையாகவே ஒமைக்ரான் அதிகரித்துள்ளது. இந்த இரு நாட்டில் இருப்பவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.. கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு நன்றாக அதிகரித்துள்ளது. இதைப் பார்க்கும்போது, 3 வது அலை விரைவில் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.. தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் ஒமைக்ரான் பற்றி அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக நாம் பின்பற்ற வேண்டும்.

வடஅமெரிக்கா
வட அமெரிக்காவில், தினமும் 10 லட்சம் கேஸ்கள் பதிவாகின்றன... பிரான்சில் ஒரு நாளில் 2.5 லட்சமும், சுவிட்சர்லாந்தில் 20,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நாங்கள் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை பற்றி எதுவுமே உறுதியாக சொல்ல முடியாது. இப்போது, டெல்டா அல்லது டெல்டா பிளஸ் மாறுபாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் ஒமிக்ரான் இதுவரை இவ்வளவு இறப்புகளை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
Recommended Video

பாதிப்பு
தடுப்பூசிகள் சற்று பயனற்றவையாக மாறிவிட்டன, மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் கூட ஓமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர்... உலகம் முழுவதும் சுமார் 28 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, நமது விஞ்ஞானிகள் அவற்றில் பணியாற்றி வருகின்றனர்... லாக்டவுன் விதிப்பது சரியான முடிவாக இருக்காது. அதற்கு பதிலாக, கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்" என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications