மார்ச் 16ம் தேதி முதல்.. 12 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு மார்ச் 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 46 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் அலையில் தொடங்கிய கொரோனா பல அலைகள் வீசியுள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் இன்னமும் கொரோனாவின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2500ஆக குறைந்தாலும் கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இந்தியா முழுவதும் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் முன்களப்பணியாளர்கள் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட், கோவாக்ஸின் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி பாதுகாப்பு இயக்கம் மேலும் விரிவடைகிறது.
இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்திருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications