போச்சு.. கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு குரல் இழப்பு ஏற்படுகிறதா.. உண்மை என்ன? கலங்கும் மக்கள்
தொற்று பாதிப்பு இருந்தால் குரலிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பிறகும், சிலருக்கு குரல் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இது நம் மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இந்த கொரோனாவைரஸ் தாக்கம் ஏற்பட்டதில் இருந்தே மக்கள் பீதியிலேயே உள்ளனர்.. காரணம் இதற்கு இதுவரை எந்தவித மருந்தும் சிகிச்சையும் இல்லாததுதான்.
இது என்ன விதமான வைரஸ் என்ற ஆராய்ச்சிகளும் கண்டுபிடித்து முடியவில்லை.. அதற்குள் வைரஸின் பல பரவல்கள் வேகமெடுத்து வருகின்றன.

பாதிப்பு
இதனிடையே தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும், தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கும்கூட, சில பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மனக்கவலை, மன அழுத்தக் கோளாறு, பொதுவான மனக்கவலை பிறழ்வு, மன உளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பு, அச்சம் போன்றவைகள் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டது.

கருப்பு பூஞ்சை
அதேபோல, தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று அரிதாக ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பூஞ்சை பாதிப்பு உண்டாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.. மேலும், கொரோனா தொற்று சுவாச பாதையையே பெருமளவு தாக்கினாலும் நரம்பு மண்டலத்திலும் சில பாதிப்புகளை சிலருக்கு ஏற்படுத்துகிறது.. அதனால்தான் இவர்களுக்கு மறதி அடிக்கடி ஏற்படும் என்று சொன்னார்கள்.

தற்காலிக குரலிழப்பு
இப்படி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் தாக்கம் மக்களை கலங்கடித்து வருகிறது.. இப்போது இன்னொரு உண்மை தெரியவந்துள்ளது.. கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு தற்காலிகமாக குரல் இழப்பு ஏற்படுகிறதாம்.. அவர்கள் குரலை இழந்தும் விடுகின்றனராம்.. இது கொல்கத்தா வரை ஊடுருவியும் உள்ளது.. கொரோனா வைரஸினால் தொண்டை பாதிக்கப்படுவதையடுத்து சிலருக்கு தற்காலிகமாக குரல் இழப்பு, பேச்சின்மை ஏற்படுகிறது..

சுவாசப்பாதையை
குரல் கரகரப்பாவதும், குரல் ஒலி அளவு குறைவதும், சிலருக்கு சில வாரங்களுக்கு பேச்சே வருவதில்லை என்றும் தொடர் புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன... தொற்று பாதிப்பு ஏற்பட்டால், சுவாசப்பாதையை கடுமையாக பாதிக்கிறது.. அதனால்தான், குரல்வளை அழற்சி ஏற்படுகிறது... இது சிலருக்கு உடனடியாக ஏற்பட்டு குரல் முற்றிலும் இழக்கப்படுகிறது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
Recommended Video

குரல்வளை
கொரோனா பாதித்து முதல் வாரம் முதல் 3ம் வாரம் முதல் 3 மாதங்கள் வரை குரலிழப்பு இருக்க வாய்ப்புள்ளதாம்.. திடீரென குரலை இழக்கும் இந்த நோய்க்கு கோவிட் வாய்ஸ் என்று பெயர் சொல்கிறார்கள். அதேசமயம், கொரோனாவால் இப்படி ஆவதில்லை என்றும், குரல்வளையில் கிருமி தொற்றினால் கட்டு ஏற்பட்டு அதன்மூலம் பேசும் திறன் இழக்க நேரிடுகிறது என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications