18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட இன்று முதல் கோவின் செயலியில் முன்பதிவு தொடக்கம்!
டெல்லி: நாடு முழுவதும் மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அதற்காக கோவின் செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

45 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக காணபல்படுகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோரையும் ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளுக்கு வரவழைத்தால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிவிடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதினர்.
இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்ள கோவின் செயலி அல்லது ஆரோக்கியா சேது செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகளில் முன்பதிவு செய்பவர் ஒரே நேரத்தில் 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முன்பதிவு செய்யலாம். பயனாளர் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
அங்கு தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை பொருத்து புக் செய்து கொள்ளலாம். ஒருமுறை தடுப்பூசி போட பயனாளி முன்பதிவு செய்துவிட்டால் நேரத்தையோ இடத்தையோ மாற்றிக் கொள்ள ஆப்ஷன் உள்ளது. அது போல் ஸ்டால்ட்டை ரத்து செய்யவும் அவர் அனுமதிக்கப்படுவார். இவ்வாறு செயலி மூலம் முன்பதிவு செய்து குறித்த நேரத்தில் செல்வதால் கூட்டமின்றி சமூக இடைவெளியை எளிதாக கடைப்பிடிக்க முடியும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications