இடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா?
டெல்லி: இடதுசாரி கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தமிழரான டி.ராஜா.
வேலூர் மாவட்டம் சித்தாதூரில் துரைசாமி- நாயகம் தம்பதியினருக்கு 1949-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி பிறந்தவர் டி.ராஜா. இளம்வயது முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
25 ஆண்டுகளாக அக்கட்சியின் தேசிய செயலராக அவர் இருந்து வந்தார். எளிமையான அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர். இந்துத்துவா கொள்கையை மிக கடுமையாக விமர்சிக்கக் கூடியவர்.

தமிழக ராஜ்யசபா எம்.பி
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா, Dalit Question, The Way Forward: Fight Against Unemployment, a booklet on unemployment உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கோட்டைகளை கைவிட்ட இடதுசாரிகள்
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு துணை நின்றவர். தற்போதைய சூழலில் இடதுசாரிகள் செல்வாக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இடதுசாரிகளின் கோட்டையான திரிபுரா, மேற்குவங்கம் இப்போது இந்துத்துவா கொள்கை பேசும் பாஜகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கேரளாவிலும் தமிழகத்திலும் மட்டும்தான் இடதுசாரி கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இடதுசாரிகளில் உயர்ஜாதி ஆதிக்கம்
இடதுசாரிகளின் இந்த பேரழிவுக்கு உயர் ஜாதி இந்துக்களின் பிடியில் கட்சித் தலைமை இருந்து வந்தது. அதனால் சித்தாந்தத்தை பற்றி சிந்திக்காமல் இந்துத்துவாவை நோக்கி மேற்குவங்கத்தில் அவர்களால் நகர முடிந்தது.

சமூக நீதி, மாநில உரிமைகளுக்கு எதிர்ப்பு
சமூக நீதி, மாநில உரிமைகள் சார்ந்த விஷயத்தில் பல நேரங்களில் பாஜக. காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொண்டு எதிராக நின்றன இடதுசாரி கட்சிகள். அண்மையில்கூட உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்க ஆதரவு தெரிவித்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் இடதுசாரிகள்.

புதிய கண்ணோட்டம்
தற்போதைய சூழலில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை என்கிற விவாதம் இடதுசாரிகளிடையே எழுந்துள்ளது. அதேபோல் பிரிந்து கிடக்கும் இடதுசாரி கட்சிகளை மீண்டும் ஒரே கட்சியாக்க வேண்டும் என்கிற குரல்களும் எதிரொலித்து வருகின்றன. இதை தீவிரமாக வலியுறுத்தி வந்தவர் டி.ராஜா.
இத்தகைய ஒரு சவாலான சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகியிருக்கிறார் டி.ராஜா. மார்க்சியத்தையும் பெரியாரியலையும் உள்வாங்கிய தீவிர சிந்தனையாளரான டி.ராஜா தமது பொறுப்பு காலத்தில் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையும் இடதுசாரிகளின் ஒற்றுமையையும் சாதிப்பாரா? என்கிற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications