எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா
டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2,290 கோடி செலவில் முப்படைகளை வலுப்படுத்தும் வகையில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ராணுவத்துக்கு 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.780 கோடியில் இந்த துப்பாக்கிகள் வாங்கப்படுகிறது. மேலும், இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு தேவையான இலக்கை நோக்கி துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ரூ.970 கோடி மதிப்பீட்டில் வாங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2019ல் அமெரிக்காவிடம் இருந்து ரூ. 700 கோடி மதிப்பில், 72,400 தானியங்கி துப்பாக்கிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த துப்பாக்கிகள் அனைத்தும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
மேலும் இந்திய ராணுவத்துக்கு, விமானப்படைக்கு தடையில்லாமல் ரேடியோ தகவல்களை பெறும் வகையில் ரூ.540 கோடிக்கு எச்.எப். டான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லையில் கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இருதரப்பிலும் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. குளிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி மேலும் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்து இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications