தூண்டிவிடும் திமுக? டேனிஷ் அலி விஷயத்தில் என்ன நடந்தது? பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபர பேட்டி
டெல்லி: பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தீவிரவாதி என பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறிப்பிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? என்பது பற்றி சபையில் இருந்த இன்னொரு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடந்தது. கடைசி நாளான 22ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் (லோக்சபா) சந்திரயான்-3 வெற்றி தொடர்பான விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்று பேசினர். அப்போது பாஜக எம்பி ரமேஷ் பிதுரி பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலியை பார்த்து தீவிரவாதி என கூறினார். இதுமட்டுமின்றி இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛இந்தியா' எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதினர்.
அதில் நாடாளுமன்ற விதிகளை மீறி செயல்பட்ட ரமேஷை, சிறப்புக்குழு அறிக்கை தரும் வரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள டேனிஷ் அலியின் இல்லத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கே.சி வேணுகோபால் ஆகியோர் சென்று கலந்துரையாடினர்.

இந்நிலையில் தான் டேனிஷ் அலியை, ரமேஷ் பிதுரி தீவிரவாதி என அழைத்தது குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ரமேஷ் பிதுரி பயன்படுத்திய வார்த்தை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இந்த சம்பவம் நடந்தபோது நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி தொடர்ந்து பிரதமர் மோடியை 'நீச்' (வெறுக்கத்தக்கவர்) என்று அழைத்தார்.
அன்றைய விவாதத்தின்போது டேனிஷ் அலி, சவுகதா ராய் உள்பட பல உறுப்பினர்களின் பேச்சுகள் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க சபாநாயகர் ஓம்பிர்லாக்கு கடிதம் எழுதியுள்ளேன். டேனிஷ் அலி மட்டுமின்றி ம் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் சில தலைவர்கள் வழக்கமான குற்றவாளி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக எம்பிக்களை தூண்டி விடுவதற்காக அவர்கள் தரக்குறைவான கருத்துகளை கூறுகின்றனர்'' என்றார்.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications