Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திரா அறிவித்த எமர்ஜென்சி..தீரமிகு போராட்டங்கள், தியாகங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அமித்ஷா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 48 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அறிவித்த எமர்ஜென்சியின் போது நடந்த போராட்டங்கள், தியாகங்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

1975-ம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் எமர்ஜென்சி அமல்படுத்தபப்ட்டது. சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு அரசு ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்திரா காந்திக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு கலைக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எமர்ஜென்சி சிறைவாசம் அனுபவித்தார்; சிறையில் கொடுமைகளை எதிர்கொண்டனர்.

எமர்ஜென்சியின் 48-வது ஆண்டை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. பிரதமர் மோடி தமது ட்விட்ட ர் பக்கத்தில், எமர்ஜென்சிக்கு எதிராக- ஜனநாயகத்தைப் பாதுகாக்க தீரமுடன் போராடிய உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது தேசத்தின் வரலாற்றில் எமர்ஜென்சியின் கறுப்பு நாட்கள் மறக்க இயலாதவை என பதிவிட்டுள்ளார்.

Dark days of Emergency remain unforgettable period in history: PM Modi

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1975-ல் ஒரு குடும்பத்தால் எமர்ஜென்சி இந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக சொந்த சுயநலன்களுக்காக எமர்ஜென்சியை அமல்படுத்தினர். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அப்போது பல லட்சம் பேர் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர். அத்தகைய தேசத்தைப் பாதுகாக்க தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார் அமித்ஷா.

Dark days of Emergency remain unforgettable period in history: PM Modi

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சித்ரவை- ஜெயில்- கொலை- ஊடக சுதந்திரம் பறிப்பு.. இதுதான் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ல் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியால் நிகழ்ந்தவை என கூறியுள்ளார். இதேபோல மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் எமர்ஜென்சியை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் #DarkDaysOfEmergency என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+