நவீன ஆயுதங்கள்.. குண்டுகள்.. தீவிரவாதிகளுக்கு வீட்டிலேயே இடம் தந்த தாவிந்தர் சிங்.. பரபர பின்னணி!
நேற்று காஷ்மீர் போலீசால் கைது செய்யப்பட ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் தனது வீட்டிலேயே தீவிரவாதிகளை தங்க வைத்து இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி: நேற்று காஷ்மீர் போலீசால் கைது செய்யப்பட ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் தனது வீட்டிலேயே தீவிரவாதிகளை தங்க வைத்து இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
நேற்று காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் ஷோபியன் அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீநகர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

டெல்லி நோக்கி சென்றார்
இந்த மூன்று தீவிரவாதிகளையும் தாவிந்தர் சிங் டெல்லி நோக்கி காரில் அழைத்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கிடைத்த உளவுத்தகவலின் படி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இவர்கள் டெல்லியில் மாபெரும் நாசகார வேலைகளுக்கு திட்டம் போட்டு இருந்ததாக தகவல்கள் வருகிறது. போலீசார் இவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள் .

சோதனை
இந்த தாவிந்தர் சிங் மீது ஏற்கனவே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு குற்றஞ்சாட்டி இருந்தார். 2001ல் நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கு தாவிந்தர் சிங் உடந்தை என்று அப்சல் குரு குறிப்பிட்டு இருந்தார். தாவீந்தர் சிங்கிற்கு பல தீவிரவாதிகள் உடன் தொடர்பு இருந்தது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தாவிந்தர் சிங் வீட்டில் இன்று காஷ்மீரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் இருந்தனர்
இந்த சோதனையில் முடிவில், தாவிந்தர் சிங் வீட்டில்தான் கடந்த இரண்டு நாட்களாக மூன்று தீவிரவாதிகள் தங்கி இருந்தனர் என்பது உறுதியாகி உள்ளது. இந்த வீட்டில் இருந்து நவீன் ரக துப்பாக்கிகள், ஏகே ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், இரண்டு கை கிடைத்துள்ளது.

எப்படி இருக்கும்
இந்த வீட்டிற்கு காஷ்மீர் போலீஸ் அதிக அளவில் பாதுகாப்பு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் ராணுவ தளவாடம் ஒன்றும் இந்த வீட்டில் இருந்து 300 மீட்டில் தொலைவில்தான் இருந்துள்ளது. இதனால் தீவிரவாதிகளும் தாவிந்தர் சிங்கும் என்ன திட்டம் தீட்டினார்கள். இதன் பின்புலம் என்று பலரும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications