ஜி.கே.வாசன் வீட்டு வாசல் முன்பு விழுந்து கிடந்த சடலம்.. யார் அவர்?.. டெல்லியில் பரபரப்பு..!
ஜிகே வாசன் வீட்டுக்கு முன்பாக சாலையில் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசனின் வீட்டுக்கு முன்பாக, சாலையில் சடலம் ஒன்று கிடந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராகவும், டெல்லியில் மதிப்பு மிக்க தலைவராகவும் வலம் வருபவர் ஜிகே வாசன்..
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான வாசன், இப்போது மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளார்.. அதிமுக-பாஜக தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்று வருகிறார்.

அதிருப்தி
நேற்றைய தினம், தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தார்.. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், "உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் முடிவு வரை தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை.. தேர்தலில் ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை தேர்தல்
ஆட்சியாளர்களுடைய தேர்தல் விதிமீறலே இன்றைக்கு அவர்களின் வெற்றிக்கு காரணம்.. இது இயற்கையான தேர்தலாக இல்லாமல் செயற்கையான தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.. இதையடுத்து, விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அவருடைய அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

டெல்லி வீடு
இந்நிலையில், டெல்லியில் ஜிகே வாசன் வீட்டு வாசலில் சடலம் ஒன்று விழுந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் வீட்டு வாசலில் சடலம் கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாசனுக்கு டெல்லியில் அசோகா சாலையில் உள்ள பட்டேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அரசின் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது...

விசாரணை
இந்த வீட்டின் வாசலில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார்... இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்... அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.. அந்த இடத்தில் நபர் இறந்து கிடக்க காரணமும் தெரியவிலல்லை.. இதுகுறித்து விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.. எம்பி வீட்டு ஆண் சடலம் கிடந்ததால் டெல்லி போலீசார் பரபரப்பு அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications