ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.. கட்டுப்பாடுகளை தளர்த்திய யெஸ் பேங்க்.. ஆனாலும் தொடரும் சிக்கல்!
யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Recommended Video
2003-ஆம் ஆண்டு ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் யெஸ் வங்கி. இந்த வங்கியின் வாராக் கடன்களின் அளவு 6 ஆயிரத்து 355 கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து யெஸ் வங்கியின் மொத்த கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது.

வங்கியில் நிலவிய நிறைய முறையற்ற செயல்பாடுகள், முறைகேடுகள் காரணமாக யெஸ் வங்கிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எடுக்க முடியாது என்று ஆர்பிஐ கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.
அதிக அளவு கடன்களை அளித்தது, ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பொய்யான கடன் வழங்கியது, வாரா கடன் அதிகம் இருந்தும் லோன்களை திரும்ப பெறாதது, ஆகியவை இந்த வங்கி நிர்வாகம் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டு ஆகும்.
இந்த நிலையில் யெஸ் பேங்க் டெபிட் கார்டு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், யெஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்தும் பணம் எடுத்தும் கொள்ளலாம்.
ஆனால் எந்த வங்கி ஏடிஎம்மாக இருந்தாலும் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியாது. ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடு இன்னும் தளர்த்தப்படவில்லை.
அதே சமயம் யெஸ் பேங்க் ஏடிஎம்களில் எதிலும் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மக்கள் இன்னும் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது. இன்னொரு பக்கம் யெஸ் பேங்க் ஆன்லைன் பண பரிவர்த்தனையும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications