101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
டெல்லி: 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது.

இதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் எல்லையில் படைகுவிப்பை தொடர்ந்து சீனா மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா கொள்கையை வலிமைப்படுத்தும் வகையில் 101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது; இந்த 101 ராணுவ தளவாடங்கள், சாதனங்கள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், ரேடார் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை நடப்பாண்டு முதல் 2024-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications