சீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்
டெல்லி: சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறை தெளிவானதாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் செளத்ரி இன்று பேசுகையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது. அந்த பாகிஸ்தானுக்கு சீனா அடைக்கலம் கொடுக்கிறது. தற்போது அந்தமான் தீவுகள் வரை சீனா போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது.

சீனாவிடன் ஏன் மென்மை போக்கு?
பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக பேசும் நாம் ஏன் சீனா விவகாரத்தில் நடுநிலை போக்கை வெளிப்படுத்துகிறோம்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தயார் நிலையில் ராணுவம்
எல்லையில் நமது படைகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ராணுவம் முழு அளவில் தயாராகவே இருக்கிறது.

இருதரப்பிலும் ஊடுருவல்கள்
சீனாவுக்கும் நமக்கும் இடையே இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு என்பது இல்லை. இப்படி தெளிவான வரையறை இல்லாததால் ஊடுருவல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் சீனா ராணுவத்தினர் ஊடுருவுகின்றனர்; அதேபோல் நமது வீரர்களும் அப்பகுதிக்கு செல்கின்றனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இறையாண்மை பாதுகாப்பு
சீனா எல்லைகளில் சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள், விமான தளங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறோம். நமது நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் இறையான்மையையும் வலுப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications