சீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்
டெல்லி: சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறை தெளிவானதாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் செளத்ரி இன்று பேசுகையில், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது. அந்த பாகிஸ்தானுக்கு சீனா அடைக்கலம் கொடுக்கிறது. தற்போது அந்தமான் தீவுகள் வரை சீனா போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளது.

சீனாவிடன் ஏன் மென்மை போக்கு?
பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக பேசும் நாம் ஏன் சீனா விவகாரத்தில் நடுநிலை போக்கை வெளிப்படுத்துகிறோம்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தயார் நிலையில் ராணுவம்
எல்லையில் நமது படைகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன. எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ராணுவம் முழு அளவில் தயாராகவே இருக்கிறது.

இருதரப்பிலும் ஊடுருவல்கள்
சீனாவுக்கும் நமக்கும் இடையே இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு என்பது இல்லை. இப்படி தெளிவான வரையறை இல்லாததால் ஊடுருவல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நேரங்களில் சீனா ராணுவத்தினர் ஊடுருவுகின்றனர்; அதேபோல் நமது வீரர்களும் அப்பகுதிக்கு செல்கின்றனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இறையாண்மை பாதுகாப்பு
சீனா எல்லைகளில் சாலைகள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள், விமான தளங்கள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறோம். நமது நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் இறையான்மையையும் வலுப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications