டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா- கடுப்பில் காங்கிரஸ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா, ஆம் ஆத்மி கட்சியை பாராட்டியிருப்பது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 11-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் முழு வீச்சில் டெல்லியில் பிரசாரம் செய்தனர். மத்திய அமைச்சர்கள் பலரது பேச்சுகளும் சர்ச்சைகளாகின. தேர்தல் ஆணையமும் மத்திய அமைச்சர்கள் பிரசாரங்களுக்கு தடைகளும் விதித்தன.
இந்நிலையில் டெல்லி தேர்தல் குறித்து காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா தமது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ஆம் ஆத்மியை புகழ்ந்து எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் டெல்லி தேர்தலில் பகீரதபிரயத்தனம் செய்துள்ளனர். டெல்லியில் பாஜக வெல்ல வேண்டும் என்று விரும்புவது தவறு இல்லை.
ஆனால் 200 எம்.பிக்கள், ஒட்டுமொத்த மோடி அமைச்சரவையும் களமிறங்கி இருப்பதைப் பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலிமை என்ன என்று புரிந்து கொள்ள முடியும். 5 ஆண்டுகளாக தாம் செய்தவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேசத்தின் அரசியல் வரலாற்றில் இது புதிய சோதனை முயற்சி. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் இதனை வரவேற்க வேண்டும். டெல்லி வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள்தான் இருந்தன. மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை தாண்டியும் கல்வி, சுகாதாரம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்திருக்கிறது கெஜ்ரிவால் அரசு.
அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்கிறது பாஜக. அவர் தீவிரவாதி எனில் மத்திய அரசு ஏன் காத்திருக்க வேண்டும்? அப்படியானால் 2014 சட்டசபை தேர்தலில் 70% டெல்லி வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் என்கிற தீவிரவாதிக்குத்தான் வாக்களித்தார்களா? இவ்வாறு சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.
மகராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மியை சிவசேனா பாராட்டியிருப்பது அக்கட்சியை அதிருப்தி அடைய செய்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications