டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா- கடுப்பில் காங்கிரஸ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா, ஆம் ஆத்மி கட்சியை பாராட்டியிருப்பது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 11-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் முழு வீச்சில் டெல்லியில் பிரசாரம் செய்தனர். மத்திய அமைச்சர்கள் பலரது பேச்சுகளும் சர்ச்சைகளாகின. தேர்தல் ஆணையமும் மத்திய அமைச்சர்கள் பிரசாரங்களுக்கு தடைகளும் விதித்தன.
இந்நிலையில் டெல்லி தேர்தல் குறித்து காங்கிரஸின் கூட்டணி கட்சியான சிவசேனா தமது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ஆம் ஆத்மியை புகழ்ந்து எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் டெல்லி தேர்தலில் பகீரதபிரயத்தனம் செய்துள்ளனர். டெல்லியில் பாஜக வெல்ல வேண்டும் என்று விரும்புவது தவறு இல்லை.
ஆனால் 200 எம்.பிக்கள், ஒட்டுமொத்த மோடி அமைச்சரவையும் களமிறங்கி இருப்பதைப் பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலிமை என்ன என்று புரிந்து கொள்ள முடியும். 5 ஆண்டுகளாக தாம் செய்தவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
தேசத்தின் அரசியல் வரலாற்றில் இது புதிய சோதனை முயற்சி. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் இதனை வரவேற்க வேண்டும். டெல்லி வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள். டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்கள்தான் இருந்தன. மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை தாண்டியும் கல்வி, சுகாதாரம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்திருக்கிறது கெஜ்ரிவால் அரசு.
அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்கிறது பாஜக. அவர் தீவிரவாதி எனில் மத்திய அரசு ஏன் காத்திருக்க வேண்டும்? அப்படியானால் 2014 சட்டசபை தேர்தலில் 70% டெல்லி வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் என்கிற தீவிரவாதிக்குத்தான் வாக்களித்தார்களா? இவ்வாறு சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.
மகராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மியை சிவசேனா பாராட்டியிருப்பது அக்கட்சியை அதிருப்தி அடைய செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications