Delhi Car Blast:டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடிப்பு.. 13 பேர் பலி! பெரும் பதற்றம்
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3-4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு இன்று மாலை 6:55 மணியளவில் வெடிப்பு குறித்து அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகு ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 CAT ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. உடனடியாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் பலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது.
கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications