நாளைக்கு 12 மணிக்கு நான் வர்றேன்! முடிஞ்சா கைது பண்ணுங்க மோடி.. சவால் விட்ட கெஜ்ரிவால்! பரபர டெல்லி!
டெல்லி: நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் சென்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்: அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த உடனே தனது பிரச்சாரத்தை துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நரேந்திர மோடி: அவரது பிரச்சாரத்தின் பெரும் பகுதி பிரதமர் நரேந்திர மோடியை தாக்கியே இருந்தது. தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் நாளுக்கு நாள் பாஜகவுக்கு டெல்லியில் பெரிய தலைவலியாகவே உருவாகி வருகிறார். குறிப்பாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு அவளுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தாலும் அதனையே தனது அரசியல் ஆயுதமாக மாற்றி பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
தனி உதவியாளர் கைது: இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சி எம்பியுமான சுவாதி மாலிவால் தான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன் என குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பதினாறாம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரான பிபவ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பாஜக அலுவலகம்: தனக்கு முன் ஜாமீன் கோரி செய்திருந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அந்த மனு வை தள்ளுபடி செய்த நிலையில் அவர் கைதானார். இந்நிலையில் தனது தனி உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளதோடு பாஜக அலுவலகத்துக்கு தான் வருவதாகவும் முடிந்தால் ஆம் ஆத்மி கட்சியினரை கைது செய்யப்பட்டும் என சவால் விடுத்துள்ளார்.
மோடிக்கு சவால்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,"ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். நாளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் சென்று பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும்" என கூறியுள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications