வழியில் தடிகளுடன் காத்திருந்த 100 பேர்... அர்விந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கார் மீது மர்ம நபர்கள் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி புறநகர் பகுதியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் காரில் சென்று கொண்டிருந்தார். நரேலா என்ற பகுதிக்கு அவர் வரும் போது 100க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் அவரை சந்திக்க முயன்றனர்.

ஆனால் அவரது கார் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தடிகளால் காரை தாக்கினர். தாக்குதலால் அப்பகுதியில் திடீர் பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications