வேகமாக காரை ஓட்டி வந்து.. டக்கென நிறுத்தி.. ஆசிட்டை எடுத்து குடித்து.. தற்கொலை.. அதிர வைத்த அதிகாரி!
கொரோனா பீதியில் வருமான வரிதுறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்
டெல்லி: காரை வேகமாக ஓட்டிக் கொண்ட வந்து, டக்கென நிறுத்தி ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார் ஒரு ஐஆர்எஸ் அதிகாரி.. தலைநகரில் .இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா இந்தியாவில் தலைதூக்கி உள்ளது.. இதில் டெல்லி தினமும் மிரட்டுகிறது.. ஒவ்வொரு நாளும் தொற்றை கட்டுப்படுத்த டெல்லி அரசு ஏராளமான முயற்சிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் ஐஆர்எஸ்அதிகாரி சிவராஜ் என்பவர் வசித்து வந்தார்.. அவருக்கு 56 வயதாகிறது.. 2006 ஆம் ஆண்டு பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி இவர். ஆர்கே புரத்தில் உள்ள ஆபீசில் வருமான வரி கூடுதல் ஆணையராக வேலை பார்த்து வந்தார்.
அவர்தான் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. காரை ஓட்டிக் கொண்டு வந்த இவர், திடீரென ஒரு ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார்.. காரில் இருந்தபடியே இந்த ஆசிட்டை குடித்துள்ளார்.. மயங்கி கிடந்த அவரை ஒருவர் பார்த்து, போலீசுக்கு தகவல் சொல்லவும் அவர்கள் வந்து சிவராஜ்ஜை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் உயிர் ஏற்கனவே போய்விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதையடுத்து எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.. அப்போதுதான் அவரது காரில் ஒரு லட்டரை கண்டெடுத்தனர்.. அதில், என்னால், என்னுடைய குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடுமோ என்று பயமாக இருக்கு.. ஒருவேளை அவங்களுக்கும் தொற்று வந்துவிட்டால், அவங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியாது... அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்குமுன்னாடிதான் சிவராஜ் கொரோனா டெஸ்ட் எடுத்திருந்தார்.. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்தது.. ஆனாலும் எங்கே தொற்று வந்துவிடுமோ என்ற பயத்திலும், தன்னால் குடும்பத்துக்கும் தொற்று வந்துவிடுமோ என்ற பீதியிலும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
எனினும் இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் மேலும் பதட்டமாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications