தூக்கிலிடப்படும் நிர்பயா குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க கோரும் மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிர்பயா படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட உள்ள 4 குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக அவர்களை சந்திக்க அனுமதி கோரிய என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாட்டை உலுக்கிய நிர்பயா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகள் டெல்லி திகார் சிறையில் வரும் 22-ந் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர். இதற்கு முன்னதாக தூக்கு தண்டனையை ரத்து செய்யும் நோக்கில் பல்வேறு மனுக்கள் குற்றவாளிகள் தரப்பில் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

Delhi court dismisses plea to convince Nirbhaya case convicts to donate organs

இந்நிலையில் தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கலாம்; இது தொடர்பாக அவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று என்.ஜி.ஓ. அமைப்பு சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் ஆஜரான என்.ஜி.ஓ. வழக்கறிஞர் சிவம் ஷர்மா, சமூக நலன் கருதி இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் பாட்டியாலா நீதிமன்றம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி சதீஷ் குமார் அரோரா இதனை நிராகரித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+