Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு- கார்த்தி சிதம்பரம் ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்.

பிரதமராக மன்மோகன்சிங் பதவி வகித்த காலத்தில் மத்திய நிதி அமைச்சராக 2006-ல் ப.சிதம்பரம் பதவியில் இருந்தார். அப்போது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்தது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

ஏர்செல் நிறுவனத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ3,650 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு அப்போது அனுமதி அளித்தது. மத்திய நிதி அமைச்சரால் ரூ600 கோடி ரூபாய் வரைக்கு மட்டுமே அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி தர முடியாது. அதற்கு மேலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுதான் அனுமதி தர வேண்டும்.

என்ன முறைகேடு?

என்ன முறைகேடு?

ஆனால் ப.சிதம்பரம் விதிமுறைகளை மீறி ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய முறைகேடாக அனுமதி கொடுத்தார் என்பது புகார். இது தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இந்த முறைகேட்டில் ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவியாக இருந்தார்; கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இந்த முதலீட்டு அனுமதிக்காக லஞ்சம் பெற்றது என்கின்றன சிபிஐ, அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகள். இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி வழக்கு

டெல்லி வழக்கு

இவ்வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 22-ந் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் என்.கே.மட்டா, சி.பி.ஐ. சார்பில் நூர் ராம்பால் ஆகியோர் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து இவ்வழக்கில் கூடுதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 20-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

ப. சிதம்பரத்துக்கு விலக்கு

ப. சிதம்பரத்துக்கு விலக்கு

இதனடிப்படையில் டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜராகி இருந்தார். ஆனால் ப.சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் முறையான மனுவைத் தாக்கல் செய்து ஜாமீன் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+