டெல்லியில் 3 மணிநேர கனமழை.. கால்வாயில் வெள்ள பெருக்கு.. வீட்டை அப்படியே உள்ளித்த நீர்.. பகீர் வீடியோ
டெல்லி: டெல்லியில் இன்று காலை பெய்த கனமழையால் கால்வாயில் வெள்ளம் போல் பெருக்கெடுத்த நீர் ஒரு வீட்டை அப்படியே தகர்த்தெறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று 3 மணி நேரமாக பெய்த மழையால் டெல்லி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆங்காங்கே உள்ள மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு போக வழியின்றி சாலைகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. காலையில் எழுந்த மக்கள் மழை வெள்ளம் போல் தேங்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வீடுகள் நிறைந்த பகுதியில் மழை வெள்ளம் கால்வாயில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது திடீரென கால்வாயின் நடுவே பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் அதனுள் செல்கிறது.

அந்த பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி அருகில் உள்ள வீட்டின் அடிப்பகுதியை அப்படியே பெயர்த்து எடுத்துச் செல்கிறது. அதன் பின்னர் அந்த வீடும் அந்த பள்ளத்தில் அப்படியே அமுங்கி விட்டது. இந்த காட்சிகளை பார்த்தவர்கள் பதறி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications