குப்பைக்கு போகும் ரூ.3.2 கோடி? இவ்வளவு செலவழித்தும் சொட்டு மழை கூட பெய்யல.. பயங்கர குழப்பம்!
டெல்லி: காற்று மாசு டெல்லியில் மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த சுமார் 3.2 கோடி செலவு செய்து மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிகள் நடந்தன. இருப்பினும், இதுவரை அங்குப் பெரியளவில் மழை பெய்யவில்லை. அங்கு நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தின்போது காற்று மாசு உச்சத்திற்குப் போய்விடும். அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பு உட்பட பல விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்குக் கூட கடந்த ஆண்டுகளில் நிலைமை மோசமாகி இருக்கிறது.

காற்று மாசு
பொதுவாகவே காற்று மாசு அதிகமாக இருக்கும்போது மழை பெய்தால் மாசு ஓரளவுக்குக் குறையும். ஆனால், டெல்லியில் குளிர் காலத்தில் அவ்வளவு சீக்கிரம் மழை பெய்யாது. இதுவே நிலைமையை மோசமானதாக மாற்றும். இந்தாண்டும் காற்று மாசு அதிகமாக இருக்கும் சூழலில் நிலைமையைச் சமாளிக்கச் செயற்கை மழையை உருவாக்க முயற்சிகள் நடத்தப்பட்டது. மேக விதைப்பு மூலம் மழையை உருவாக்கத் திட்டமிட்டனர்.
இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வாளர்கள் டெல்லியில் மேக விதைப்பை முயன்றனர். இருப்பினும், அங்குக் கடைசி வரை மழை எதுவும் வரவே இல்லை. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி திணறுகிறது.
தீர்வை தராது
அதேநேரம் மேக விதைப்பு மூலம் செயற்கை மழையை உருவாக்குவது காற்று மாசை நிரந்தரமாகக் கட்டுப்படுத்தாது என்றும் இதற்கு அதிகச் செலவும் ஆகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். செயற்கை மழை தற்காலிகமாக ஓரிரு நாட்கள் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்களை அடக்கினாலும், அவை சில நாட்களில் மீண்டும் வந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்..
மேக விதைப்பு பரிசோதனைக்காக டெல்லி அரசுக்கும் கான்பூர் ஐஐடி-க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து முறை மேக விதைப்புக்கு ₹3.2 கோடி ஒதுக்கப்பட்டது. அதாவது ஒரு முறை மழையை உருவாக்கும் முயற்சிக்கு ரூ.64 லட்சம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தாலும் கூட மழை வரும் என்பது உறுதியில்லை.
பலன் இல்லை
வடக்கு டெல்லியில் மூன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் அவற்றில் எந்தவொரு முயற்சியிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை. கடந்த சில நாட்களாகவே டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு மிக மோசமாகவே இருப்பதால் மேக விதைப்பு பயன் தரவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் அனுபமிதா ராய்சவுத்ரி கூறுகையில், "மேக விதைப்பிற்குப் பிறகு நகரில் பெரியளவில் மழை எதுவும் பெய்யவில்லை.. மழை மாசுகளைத் தற்காலிகமாகக் குறைத்தாலும் கூட அவை மீண்டும் அதிகரிக்கும்.
மழை மூலம் சில மணி நேரம் முதல் அதிகபட்சம் ஓரிரு நாட்கள் வரை மட்டுமே காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியும். இது நிலையானது இல்லை.. குளிர்காலம் முழுக்க இதைத் தொடர்ந்து செய்ய முடியாது. அதற்குப் பதிலாகக் கடுமையான விதிகளை அமல்படுத்துவதில் இந்த பட்ஜெட்டை செலவழிக்க வேண்டும். அப்போது தான் காற்று மாசு குறையும்" என்றார்.
சிக்கல் என்ன
டெல்லியில் குளிர்காலத்தில் வானிலை பொதுவாக மிகவும் வறண்டதாக இருக்கும் என்றும் காற்றில் மிகக் குறைந்த ஈரப்பதம் இருக்கும் என்பதால் செயற்கை மழையைப் பெய்ய வைக்க முடியாது என டெல்லி ஐஐடி வளிமண்டல அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் ஷாசாத் கனி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "டெல்லியில் வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் காரணமாக மட்டுமே குளிர்காலத்தில் மழை பெய்யும். அப்போது மேக விதைப்பு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அதேநேரம் மேக விதைப்பின் காரணமாக ஒரே நேரத்தில் அதிகப்படியான மழை கொட்டித் தீர்க்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது. மழையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அப்போது உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் கூட ஏற்படலாம். அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? ஸ்மோக் டவர்கள், ஸ்மோக் கன்கள் மற்றும் மேக விதைப்பு என சர்வயோக நிவாரணி போன்ற தீர்வுகளை நோக்கியே நாம் செல்கிறோம். ஆனால், உண்மையில் நாம் படிப்படியாகக் காற்று மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் யாரும் கவனம் செலுத்துவது இல்லை" என்றார்.
என்ன செய்யலாம்!
டெல்லியில் காற்றுத் தரத்தை மேம்படுத்தப் போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் மாசு ஏற்படுவதைக் குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் சுனில் தஹியா கூறினார். அந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமல் காற்று மாசை நிரந்தரமாகக் குறைக்கவே முடியாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "மேக விதைப்பு உள்ளிட்டவை குறுகிய பலன்களைக் கொடுத்தாலும்.. அவை நீண்ட கா தீர்வுகள் அல்ல. காற்று மாசை அணுகும் முறையே மாறினால் மட்டுமே நமக்குத் தீர்வு கிடைக்கும்" என்றார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications