பரபரப்பு.. பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்..!
பிரதமர் மோடிக்கு ரத்தத்தினால் விவசாயிகள் கடிதம் எழுதினர்
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், அந்த சட்டங்களுக்கு எதிராகவும் போராடி வரும் விவசாயிகள், பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்திலேயே கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.. அந்த மசோதாக்களை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசு, அதனை சட்டமாக்கியுள்ளது.

ஆனால், மண்டி முறையில் நிறைய குறைபாடுகள் உள்ளதாகவும், அந்த சட்டங்களால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்கள்தான் பலனடைவர், தங்களுக்கு அதனால் பாதிப்புதான் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.. எனவே, அந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஆனால், மத்திய அரசு நடத்தும் எல்லா பேச்சுவார்த்தைகளுமே தோல்வியில் முடிந்துவிடுகிறது.. அதேசமயம் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், மசோதாக்களை திரும்ப பெறும்வரை தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று விவசாயிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள்..
இந்த நிலையில், பாதிப்பை தரும் அந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர்... விவசாயிகள் இப்படி ரத்தத்தில் கடிதம் எழுதியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications