2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏற்பதாக ஹைகோர்ட் தீர்ப்பு
டெல்லி: 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு மிகவும் முக்கியமானது. இது திமுகவுக்கு மிக பெரிய பிரச்சினையையும் அவப்பெயரையும் கொடுத்தது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்படியாக உணர்வுபூர்வமான கஷ்டங்களையும் திமுகவுக்கு இந்த 2ஜி கொடுத்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.
இதன் மூலம் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ. ராாச மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில்தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் இல்லை என 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஹைகோர்ட் இன்று தீர்ப்பளிக்க கூடியது. அப்போது 2ஜி வழக்கு தொடர்பான சிபிஐயின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அது போல் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மே மாதம் முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications