திமுகவுக்கு மெகா சிக்கல்: 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு-நாளை தீர்ப்பு!
டெல்லி: 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
திமுகவுக்கு மிக பெரிய தலைவலியைக் கொடுத்த வழக்குகளில் முக்கியமானது 2ஜ வழக்கு. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் மத்திய டெலிகாம் துறை அமைச்சராக இருந்தவர் ஆ ராசா.

அப்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்குப் பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், இந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, கனிமொழி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இருந்தது. அவர்கள் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து இருந்தது. சிபிஐ தாக்கல் செய்த அந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
அதாவது மத்திய டெலிகாம் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது சிஏஐ குற்றச்சாட்டு. இதனடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்தது.
அவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2018-ம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
.சிபிஐ மற்றும் அமலாக்க துறை என இரு இந்த தீர்ப்பை எதிர்த்து 2018 மார்ச் 19ஆம் தேதி அமலாக்க துறை சென்னை ஐகோர்ட்டை அணுகியது. மறுநாளே சிபிஐயும் உயர் நீதிமன்றத்தில் அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சரியானது இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. இந்த வழக்கில் தான் இப்போது டெல்லி ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications