பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது- டெல்லி ஹைகோர்ட் வார்னிங்
டெல்லி: பாலியல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், பெற்றோர் விவரம், முகவரி போன்ற தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் அல்லது அறிக்கைகளில் வெளியிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம், நகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒரு போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தபோது நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா, டெல்லி காவல் ஆணையரிடம் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு எதிரான சட்ட விதிகளை கடுமையாகப் பின்பற்றும்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் (SHOs) மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு வலியுறுத்தினார்.
வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் (status report) பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிமன்றம் கவலையுடன் குறிப்பிட்டது.
மோதி நகர் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட துணை ஆணையர், ஜனவரி 14 அன்று, தனது கீழ் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், பெற்றோர் விவரம், முகவரி ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எந்த அறிக்கையிலும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதை கடுமையாக உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
மேலும், இந்த விஷயத்தில் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் டெல்லி காவல் ஆணையர் மீண்டும் தக்க அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தற்போதைய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் 2021-ஆம் ஆண்டில் 12-13 வயதுடைய சிறுமியை தவறான காரணம் கூறி அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் அச்சிறுமியை ஒரு அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அந்த சிறுமி மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் எனக்கு சம்மதத்துடன் கூடிய கள்ளஉறவு இருந்ததாகவும், சிறுமி எங்கள் கள்ள உறவை விரும்பாததால் என் மீது பொய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்றும் அந்த நபர் வாதிட்டார்.
மேலும், 2021-ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், சமூக தொடர்புகள் மிகக் குறைவாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, வழக்கின் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட விதத்தில் குற்றம் நடந்திருக்க வாய்ப்பு குறைவு என்றும் அவர் வாதிட்டார்.
ஆனால், பெருந்தொற்று காலத்தில் குற்றம் நடந்ததாகக் கூறப்படுவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை நம்பாததற்கோ அல்லது குற்றம் நடந்திருக்க முடியாது என்று கருதுவதற்கோ மட்டும் ஒரு காரணமாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. வெறும் பெருந்தொற்று சூழலை வைத்து குற்றத்தின் நம்பகத்தன்மையை மறுக்க முடியாது என வலியுறுத்தியது.
பாதிக்கப்பட்ட சிறுமி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் சம்பவம் நடந்த விதத்தை தெளிவாக விவரித்து, வழக்கில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து உறுதியாக கூறி வந்தார் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே, அவரது வாக்குமூலத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது நீதிமன்றத்தின் கடமை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் இடையே உறவு இருப்பதாகக் கூறப்படுவது, சிறுமியின் வாக்குமூலத்தை சந்தேகிக்க ஒரு காரணமாகாது என நீதிமன்றம் மேலும் கூறியது. தாயார் குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் சந்தித்ததாகக் கூறப்படுவதோ அல்லது அவரிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படுவதோ, இந்த கட்டத்தில் குற்றத்தின் தீவிரத்தை குறைக்காது என்றும் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.
"குற்றம் சாட்டப்பட்டவரை நம்பி, 'சாச்சா' (தந்தை போன்ற ஒரு உறவு) என்று அழைத்த பாதிக்கப்பட்ட சிறுமி, மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தொடர்ந்து கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் நடத்தை, அது உண்மையாக இருந்தாலும், ஒரு சிறுமியின் வாக்குமூலத்தை சந்தேகிக்க ஒரே காரணமாக அமையாது," என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
மேலும், "புகார் கூறப்பட்ட இந்த குற்றம் ஒரு குழந்தைக்கு எதிராக இழைக்கப்பட்டது. இதன் தீவிரத்தை ஒரு மூன்றாம் நபரின் நடத்தை மூலம் மதிப்பிட முடியாது," என்று நீதிமன்றம் அழுத்தமாக கூறியது. குழந்தையின் மீதான பாலியல் குற்றத்தின் தன்மையை வெளிநபர்களின் செயல்களால் குறைத்து மதிப்பிட முடியாது என வலியுறுத்தியது.
இந்த கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்க நீதிமன்றம் விரும்பவில்லை. அதன்படி, தற்போதைய ஜாமீன் மனுவும், அது தொடர்பான நிலுவையிலுள்ள மற்ற மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications