Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசிடம் இருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பு- 70,000 கிலோ 'ஹெராயின்' மாயம்- ஹைகோர்ட் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு பறிமுதல் செய்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் மாயமானது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2018-ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என்பது பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு. மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இப்போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Delhi High Court issues notice to MHA on 70 000 Kg Heroin worth R5 lakh crore disappeared

மத்திய அரசு பறிமுதல் செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கும் தரவுகள் அனைத்தும் தேசிய குற்றப்பதிவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகளுடன் முரண்பாடாக இருக்கிறது; இதனடிப்படையில்தான் மத்திய அரசு பறிமுதல் செய்ததாக கூறப்படும் ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது என வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2018-ல் சிக்கிமில் 15,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2018-ம் ஆண்டு மொத்தம் 19,691.155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இப்படி 2018-2020ம் ஆண்டு காலத்தில் மட்டும் 70,000 கிலோ போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி காணாமல் போன ஹெராயின் போதைப் பொருள் எங்கே போனது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த பின்னர் கிடங்கில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ5 லட்சம் கோடி என சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+