ராகுல் ஆதரவு போராட்டத்தில் ஷாக்! போலீஸ் முகத்தில் எச்சில் துப்பிய காங். மகளிர் அணி தலைவி டி சோசா!!
டெல்லி: அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5-வது நாளாக விசாரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது டெல்லி போலீசார் முகத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி நெட்டா டி சோசா எச்சில் துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் சோனியா, ராகுல் இருவரும் ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு.
#WATCH | Mahila Congress President Netta D'Souza spits at police personnel during a protest with party workers in Delhi against ED for questioning Congress leader Rahul Gandhi in the National Herald case. pic.twitter.com/cPBIntJq1p
— ANI (@ANI) June 21, 2022
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோனியா, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த வாரம் 3 நாட்கள் அமலாக்கப் பிரிவு முன்பாக ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் 30 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பாக ராகுல் ஆஜரானார். ராகுலிடம் இந்த விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு எதிராக இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை வேனில் ஏற்றிய போது, காங்கிரஸ் மகளிர் அணி தலைவி நெட்டா டிசோசா, போலீஸ் முகத்தில் எச்சிலை காறி துப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி, போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை கொத்தாக பிடித்து தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் டி சோசா, போலீஸ் முகத்தில் காறி துப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications